நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 17 December 2009

உன் வாழ்வு?

இனியவளே
உன் பின்னே என் வாழ்வு!
யார் பின்னே உன் வாழ்வு?

என்னில் என்றும் மாறாதி௫ப்பது

என்னில் என்றும் மாறாதி௫ப்பது
நினைவிலி௫க்கும் உன் இனிய பிறந்தநாளும்
நினைவு படுத்தும் எனை நீ பிரிந்த நாளும்

கைவிட்டுப் போனதேன்????

காதலெல்லாம் கவிதையானது...................
என் கவிதையின் காதல் மட்டும்
கைவிட்டுப் போனதேன்?????????????

அழவைத்துப் பார்க்கிறாய்

உன்னை அழகானவள்
என்று கூறியதற்கா
என்னை அழவைத்துப் பார்க்கிறாய்

இல்லை.....

உன்னிடம்
என் நினைவாக ஒன்றுமே இல்லை
என்னிடம்
உன் நினைவை தவிர வேறெதுவும் இல்லை

நீ........

உணர்வில் நீ சிதையாமல்
உருவத்தில் நீ மறையாமல்
உன்னதமான இவன் இதயத்தில்
இன்றும் உயிர்த்துடிப்புடன் நீ........

உன்னால்!!!!

இப்போதெல்லாம்
கல்லறைவாசம்
எனக்குப் பிடித்த ஒன்றாகிவிட்டது
கண்மணி உன்னால் !!!!

நீயும் உன் நினைவுகளும் மட்டுமே

நிரந்தரமில்லாத
உறவுகளுக்கிடையில்
நிரந்தரமாய் நீயும்
உன் நினைவுகளும் மட்டுமே

எப்படி முடிந்தது உன்னால்????????

நீ
கொடுத்த முத்தத்தின்
ஈரம்கூட காயவில்லை
அதற்குள் இன்னொருவனின்
தோழில் சாய எப்படி முடிந்தது
உன்னால்????????

மனதோடு உறவாட உன் உறவு தேவை.

விழிகள் நட்சத்திரங்களை
வருடினாளும் விரல்கள்
என்னவோ யன்னல் கம்பிகளோடுதான்!
எங்கு நீ இருந்தாலும் என்னுடன் வாழ்ந்த
வாழ்வை என் இதயம் மறக்காது!
உன் எண்ணம் என் உணர்வுகளை சுட்டெரிக்கின்றது.
சொல்லமுடியாத வார்த்தைகளைக் கொண்டு
சொல்ல துடிக்கவைக்கும் சில கனவுகள்.

உன்னை நேசித்ததற்காய்......

உன்னை நேசித்ததற்காய்
எனக்குள் நானே நொந்து போகிறேன்.
காதல் விளையாட்டில் பெண்ணுக்கு
பாவமில்லை ஆணுக்கு மன்னிப்பில்லை

உன் நினைவில் நான்....

உன் நினைவில் நான்
கரைந்து போனது மட்டுமல்ல
உறைந்தே போயிருக்கின்றேன்
இதை உணர்வாயா நீ…?

ஒர் கடிதம் எழுது

அன்பே எழுது எழுது
எனக்கு ஒர் கடிதம் எழுது
என்னை விரும்புகிறாய் என்றில்லை
வேறோருவரையும் விரும்பவில்லை என்று....

ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்...

என்னை மட்டும் அல்ல
நீ உன்னையும் சேர்த்து தான்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்
என்னைக் காதலிக்கவில்லை
என்று சொல்லுவதால்

ஏன்?

உன்னைப் பார்ப்பதில் உள்ள
சுகத்தை விட
பார்க்காததால் உண்டான வலி
சுகமாய் இருக்கிறதே…. ஏன்?

உனக்கு எங்கே தெரியப்போகிறது!

ஒரு வார்த்தையில்
சொல்லிவிட்டாய்
"மறந்துவிடு!" என்று
உன் அந்த ஒரு வார்த்தையால்
ஏற்பட்ட வலி பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது!

அருகினிலே நீயில்லை

என்னருகே இருக்கையிலே
உன்னருமை தெரியவில்லை
அருமையினை உணர்கையிலே
அருகினிலே நீயில்லை

அழகாய் தான் இருந்தாய்..

அழகாய் தான் இருந்தாய்...
மெல்ல தலை சாய்த்து ...,
நெற்றி புருவம் உயர்த்தி..,
சின்னதாய் புன்னகைத்த போது..,
நான் தான் உடைந்து விட்டேன்

உன்னை...

உன்னை கண் சிமிட்டாமல்
பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்,
ஆனால் இப்பொழுது கண் சிமிட்டும்
நேரமாவது பார்க்க மாட்டோமா என்று ஏங்குகின்றேன்

பிரிவு

நீ இருக்க விரும்பாத என் இதயத்தை
நெருப்பில் இட்டுவிட நினைக்கிறேன்!!!
ஆனால் மனம் வரவில்லை
உன் நினைவுகளும் எரிந்துவிடுமே என்ற தயக்கத்தில்!!!

பிரிவு

நீ இருக்க விரும்பாத என் இதயத்தை
நெருப்பில் இட்டுவிட நினைக்கிறேன்!!!
ஆனால் மனம் வரவில்லை
உன் நினைவுகளும் எரிந்துவிடுமே என்ற தயக்கத்தில்!!!

யார் சொன்னார்கள்....

உனக்கு கவிதை எழுத
தெரியாது என்று யார் சொன்னார்கள்...
உன் புத்தகம் அனைத்திலும்
எழுதி இருக்கிறாயே...
உன் பெயரே ஒரு கவிதை யாய்.........

சொல்லி விட போகிறேன்...

சொல்லி விட போகிறேன்...
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும் உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும் காதல் போரும்...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.
மரணம் கூட பழகலாம் போல...
மன'ரணம்'..... கடினமாயிருக்கிறது.
மௌனம் உணர மறுக்கும் உனக்கு...
வார்த்தைகள் கொண்டே சொல்லி விட போகிறேன்...
உனக்கான என் காதலை..

காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன் உன்
வருகைக்காக காத்திருப்பது
சுகம்தான் என்றாலும் என்
உயிர் போகும் முன் வந்துவிடு
எனக்கு உன்னை தந்திவிடு

உன் நினைவுகள்

உன் நினைவுகள்
என் இரவுகளை
தின்றுகொன்டிருக்கின்ற்ன...

என்னோடு எப்போதும்
பேசும் நிலவிற்கு
இப்போதெல்லாம்
பதில் சொல்வதில்லை...

நீ கடக்கும்
இடமெல்லாம் என்
காலடிகள் காத்துகிடக்கின்றன...

எனக்கான உனது
பார்வைகாக
என் வாழ்வு
நகர்ந்து கொன்டிருக்கிறது.

நம் காதலின் சில பதிவுகள்....

நீ உறங்கிய பின் உன் அமைதியை ரசிக்கும் நான்...
நான் எழும்முன் என் அமைதியை ரசிக்கும் நீ...

உனக்கு தெரியாமல் உன் தேனீரை கொஞ்சம் நான் பருகியதும்...
எண்னாக்கு தெரியாமல் என் சட்டைக்கு நீ இட்ட முத்தங்களும்...

நீ கொடுத்து அனுப்பிய உணவின் நடுவில் ஒளிந்திருந்த சாக்லட்டும்...
அதே உணவுக் கூடேயில் நீ பார்த்த ஒற்றை ரோஜாவும்...

எனக்கான உன் பிரார்த்தனைகளும்....
உனக்கான என் பரிசுகளும்...

நீ நான் என் பிரித்து எழுதியதற்காக நீ கொண்ட கோபமும்...
நெற்றியில் நான் இட்ட சமாதான முத்தமும்....
கலந்துவிட்ட கண்ணீர் நாம் உதடுகளில் இனிக்கும் தருணமும்...

நம் காதலின் சில பதிவுகள்....

இதயம்

தயவு செய்து உன் விழி
அம்புகளை என்மேல் வீசாதே!
தடுப்பதற்கு என்னிடம் கவசமில்லை...
இதயம் மட்டுமே உள்ளது!!

உண்மை காதலன்

நான் இறந்த பின்பு
என் கல்லறை முன்பு வந்து அழுது விடாதே
நான் எழுந்தாலும் எழுவேன்
உன் கண்ணீரை துடைப்பதற்க்காக

அன்னை மடி வீழ்ந்து ஆசை தீர அழ வேண்டும்...

அன்னை மடி வீழ்ந்து
ஆசை தீர அழ வேண்டும்...
ஏதேதோ காரணங்கள், எண்ணமெல்லாம் ஓரிடத்தில்...!
உறக்கமில்லை என்றாலும்
இமையிரண்டும் மோதிக்கொள்ளும்...
முட்டி வந்த கண்ணீரை
மூடி வைத்தே முற்றும் சொல்லும்...!

உன் உறவு தேவையடி

நிஜமாக நேசித்தேன்
நினைவாகிப் போனாய்
உயிருள்ளவரை உன் உறவு தேவையடி.

வருவாயா?

உள் உயிரே உருகுதடி
உன் நினைவுகளால்
என் ஜீவன் ஓயும் நேரத்திலாவது வருவாயா?

நான் தான்...

எனக்கு
முகவரி இல்லை
என்றாலும் உன்னுடைய
நிரந்திர முகவரி நான் தான்....

முயற்ச்சிக்காதீர் தோல்விதான் மிஞ்சும்..!

கடலில் கடுகை தேடுவது,
விண்ணின் எல்லயை தேடுவது,
பெண்ணின் மனத்தின்
அர்த்தம் தேடுவது..
என்றும் இயலாதது…. முயற்ச்சிக்காதீர்
தோல்விதான் மிஞ்சும்..!

காதலும் கூட காரம் தான்

காதலும் கூட காரம் தான்.
சிலருக்கு அது ருசி
பலருக்கு அது கண்ணீர்…

வழிகாட்டிப்போனாளே

விலகாத சொந்தம் இருக்க
தனியாக்கிப்போனாளே
பிரிவாலே நானும்வாட
வழிகாட்டிப்போனாளே

மறுபடியும் வருவேன்

உணர்ந்தேனே என்னில்
உன்னை உருக்காதே மீண்டும் என்னை
நீ தந்த சாபம்காதல் நினைவாலே தவித்தேன் பெண்ணே
நீயின்றி துடித்தேன் கண்ணே விழி என்று உன்னைக்கானும்
தனமுன்னை தேடித்தேடி தேய்ந்தேதான் போனேன் மானே
மரணந்தான் வந்தால் கூட மறுபடியும் வருவேன் நானே

என்னுயிர்

காலங்கள் போனது
காற்றிலே தேடினேன்
விதிதேடும் மதியாக
எனைவிட்டுச்சென்றது
என்னுயிர்

வருவேன்

நிழலேது நியமேது
அறியாது இளமாது
தலைசாய்க்க மடி
தேடி யுகம்தோறும் வருவேன்

உன் நினைவுகள்

இவன்
உடல் உயிரை சுமந்திருக்கும் வரையிலும்
உன்
நினைவுகள் இவனுள் நிறைந்திருக்கும்.

தழுவிஅழுகிறதே

உனது முகத்தை
எனதுஇதயம் உயிரில் எழுதியதே
உறக்கம் மறந்த விழிகள்
அதனை தழுவிஅழுகிறதே

வருவாயோ பெண்னே நீயும் தருவாயோ மீண்டும் என்னை

கண்ணீரில் உன்னைத்தேடி சருகாய்த்தான் போனேன் இன்று
உன்னைநான் கண்டநேரம் என்னை நான் இழந்தேன் இங்கு
நெஞ்செங்கும் உந்தன் நினைவே
போகாதே எந்தன் உயிரே வாழத்தான் தோன்றாதிங்கே
பார்ப்பேனோ இனிமேல் உன்னை தொலைத்தேனே உன்னில் என்னை
வருவாயோ பெண்னே நீயும் தருவாயோ மீண்டும் என்னை

சோக கீதமாக........

எல்லோருக்கும் ரசிப்புக்குரியதுதான்
புல்லாங்குழலொலி
எனக்குகமட்டும்
அதில் மூங்கில் காடுகளின்
சோக கீதமாக கேட்கிறதே

ஈரமாய் மிஞ்சும்

காலங்கள் போகும்
இது கதையாகிப்போகும்
உன்னோடு வாழ்ந்த ஞாபகம்
மட்டும் நெஞ்சினில் ஈரமாய் மிஞ்சும்

வலி

வலியை
விட வலிக்கிரது
உன் நினைவுதரும் வலி

நினைக்காமல் இருக்க முடிவதில்லை

உன்னை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
இரவின் விழிப்பிலும் என்தோழில் நீ சாய்ந்திருக்கின்றாய்

மறந்து போனாய்?

இந்தப் பூமியில்
எல்லாமே உனக்கு நினைவிருக்கிறது
எப்படி உன்னை நேசித்த உள்ளத்தை
மட்டும் மறந்து போனாய்?

சின்னாபின்னமாக்கிவிட்டாயே

தேனீர்போல சிறுகசிறுக சேர்த்தேனே சீரூட்டிப் பார்த்தேனே அதை சின்னாபின்னமாக்கிவிட்டாயே