நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

வாழ வி௫ப்பமில்லை

நீ இல்லாத இவ்வுலகில் வாழ
எனக்கு வி௫ப்பமில்லை இ௫ந்தும்
உன் நினைகளைப் பிரிந்து சாகவும் முடியவில்லை
இந்த உலகத்திலி௫ந்தே அன்னியப்படுத்தப்பட்டதாய்
உணர வைக்கிறாயடி கண்ணே

என்றும் துனையாக.

உன் மனதில்- உன் இதயத்தில்
உன் கனவில்-உன் வாழ்வில்
யாரேனும் இருக்கலாம் -ஆனால் யாரும்
இல்லாதபோது நான் இருப்பேன் -உன் அருகில்
என்றும் துனையாக.

அதே இடத்தில்

தொலைந்த இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறேன்.
நிலை தடுமாற வைக்கிறாய்.
வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்

உன்காதலுக்காக ஏங்குதடி நெஞ்சம்..

உன் மடியில்
தலைசாய்த்திருந்த தருணத்தில் கூட
நினைக்கவில்லை உன் பிரிவை
உன் விரல் பிடித்து நடைபழகிய அந்நாட்களை
திருப்பிக்கொடுப்பாயா மீண்டும்
உன்காதலுக்காக ஏங்குதடி நெஞ்சம்..

நீ

அன்நாட்களில் என்மடியில் காதலியாக நீ இன்நாட்களில் வேறொறுவன் மடியில் மனைவியாக நீ

நான்படும் வேதனை

உன்தாய் கருவிலே
உனைசுமந்த வேதனையைவிட
என் இதயத்தில் உனைசுமந்து
நான்படும் வேதனை
அதை சொல்லவே மொழில்லையடி

நிலவுகூட நெருப்பானதடி உன்நினைவுகளால்

என் வாழ்க்கை எங்கும் இரத்தத்தின் வாசத்தை உணர்கிறேன்
உன்னோடுதான் நான் உணர்ந்தேன் உன்னதபாசம் என்றால் என்ன என்பதை
உண்மையான காதல் என்றால் உயிரைஉருக்கிப் பிழிவதா?
நிலவுகூட நெருப்பானதடி உன்நினைவுகளால்
என்றும் உன்ஞாபகங்கள் என் நெஞ்சில் புயல்வீசிக்கொண்டே இருக்கும்..

ஏன் இந்த தூரம்?

உனக்கும் எனக்கும் இடையில்
ஏன் இந்த தூரம்
அதனால் தான் என் கண்ணில்
என்றும் ஈரம்
என்று வரும் நான் உன்னை
சேரும் நேரம்
அது வரை தாங்குமா உயிரை
இந்த தேகம்?

எதற்காக என்னை நேசித்தாய்?

எரியும் நெருப்பிலே எனையிட்டுப்போனவளே
எதற்காக என்னை நேசித்தாய்? இதயம்முழவதும்-
நீ தந்த நினைவுகளுடன் நின்மதியின்றி நான் வாழவா?

மன்னிக்க முடியவில்லை

பகலோடு சேர்ந்து கருகிக்கொண்டிருப்பது காலத்தின் சிறகுமட்டுமல்ல என் காதலும்தான் -மரணமே!

உன்னை என்னால் மன்னிக்க முடியவில்லை ஏன் என்னை மட்டும் இன்னும் விட்டுவைத்திருக்கிறாய்??

நினைவுகளுடன் உனக்காக வாழ்கிறேன் ஜடமாக...

எதற்காக இத்தனை தூரம் விலகிச்சென்றாய்?
பதில் தேடித்தேடியே என் இளமைகள் தொலையுது
உன்னை எண்ணியே- உன்
நினைவுகளுடன் உனக்காக வாழ்கிறேன் ஜடமாக....

இன்று புரியவைத்தது உன் பிரிவு...

தோழியே அன்று நான்படித்தேன்
பாசம்வைப்பது பாவம்
பழகிப்பிரிவது துயரம் என்று
ஆனால் அன்று அது புரியவில்லை
இன்று புரியவைத்தது உன் பிரிவு...

கற்றுக் கொடுத்தன

உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!

யார் சொன்னார்கள்,???

என் வீட்டு ரோஜா செடி திடிரென்டு
பூ பூப்பதை நிறுத்திவிட்டது,
அதற்கு யார் சொன்னார்கள்,
நீ என்னை பிரிந்ததை...

வெறுமையாகவே இருக்கின்றன என் கனவுகள், என்னை போலவே...

கடைசியாக என் கனவில வந்தபோது,
நி விட்டு சென்ற காலடி சுவடுகளுடனும்,
உன் கொலுசுகள விட்டு சென்ற ஓசைகளுடனும்,
வெறுமையாகவே இருக்கின்றன என் கனவுகள்,
என்னை போலவே...

நீ என்னை பிரிந்தவுடன்..

உன் அழகை எல்லாம் எடுத்து
தங்களை அலங்கரித்து கொண்டிருந்த
என கவிதைகள் எல்லாம்,
இப்போது பார்,
அழகை இழந்து விதவைகள் போல
ஆகிவிட்டன, நீ என்னை பிரிந்தவுடன்..

தோண்டி பார் என் கல்லறையை

நான் இறந்த பிறகு,
தோண்டி பார் என் கல்லறையை,
சில வைரங்களும் முத்துகளும கிடைக்கலாம்,
அவை வேறு ஓன்றும் அல்ல,
உன்னோடு சிரிக்க நினைத்த சிரிப்புகளும்,
உனக்கு கொடுக்க நினைத்த முத்தங்களும் தான்..

தெரியவில்லை.....

உன்னை மறந்துவிட முயற்சி,
செய்து கொண்டு இருக்கிறேன்.
மறந்துவிட போகிறேனா இல்லை,
இறந்துவிட போகிறேனா தெரியவில்லை

காதல் என்பது கானல்....

நொடியில்
என்னுள் பூத்த
காதல் நீ..........
தொட்ட கணத்தில்
நெஞ்சில்
தீ.......................

தீண்டிய
பொழுதில்
மனமசைத்தாய்
என் நெஞ்சை
மழுங்கடித்தாய்....

காதல்
கடலில் நான்
தவிக்க மின்னலாய்
மறைந்தாய்..................

தொட்டு
தூக்கிய வாழ்க்கை
சொன்னது
காதல் என்பது கானல்

என் முதல் காதல் நீ

என் முதல்
காதல் நீ

நான்
காதலித்ததே
உனக்கு தெரியாது.

என் கடைசி
காதல் நீ

நான்
உன்னை மட்டும்
காதலித்ததுதான்
உனக்கு தெரியும்.

என்று புரிவாய் எனை....

உனக்காக காத்திருந்து என்
உயிர் பிரியுமென்றால் அதைவிட
வேறன்ன வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே

எத்தனை இரவை என் விழி
பகலாக்கியிருக்கும் எல்லாம்
அன்பே நிலா உன்னை காணத்தானே

என்று புரிவாய் எனை
என்றும் காத்திருக்கும் உன்
காதலன் நானல்லவா

இன்னொரு உயிராய்..!!

காலச்சக்கரம் அவள் கால்த்தடத்தை அழித்திருக்கலாம்,
ஆனால் என்றும் என்னுள் இருக்கும்
காதலை அழிக்க முடியாது
என் மூச்சுக்காற்று இருக்கும் வரை
என் காதலும் ஜீவித்திருக்கும் என்னுள்
இன்னொரு உயிராய்..!!

அவள் என்னைப் பிரியவில்லை..!

கேலி செய்யாதீர்கள் என்னை…
காதலில் தோற்றவன் என்று,
அவள் என்னைப் பிரியவில்லை..!
இன்றும் என் அருகில் இருக்கிறாள்
நினைவுகளாய் !!

வாசிக்க நீயின்றி…

அன்று கண்ணீர் கூட சுகமானது
துடைக்க நீ இருந்ததாய்…

இன்று சிரிப்பு கூட வேதனையானது
சேர்ந்து சிரிக்க நீ இல்லாததால்..

அன்று ஒருவரி சொல்ல தயங்கிய நான்
இன்று பக்கம் பக்கமாய் கிறுக்கித்தள்ளுக்கிறேன்
என் கவிதைகளை வாசிக்க நீயின்றி…

யாருக்குமே கேட்டிருக்காது ...

கடற்கரையில்
பிரிந்த காதலுக்கெல்லாம்
கத்திஅழும் சக்தி இருந்தால்
அலைகளின் சத்தம் யாருக்குமே கேட்டிருக்காது

நினைவு....

உன்னை நினைக்காத நேரங்களில் எல்லாம்
நினைத்துக் கொள்கிறேன்
உன்னை நினைக்கக் கூடாது என்று.

கோபம் பற்றி எனக்குத் தெரியாதா..

உன்
பொய்க் கோபம் பற்றி
எனக்குத் தெரியாதா..
கிள்ளியவனென்பதற்காக
மணம்
வீசவா மறுக்கும் மல்லிகை?

நீ தான்...

என் காதலின் ஆரம்பமும் நீ தான்
கண்ணீரின் தொடக்கமும் நீ தான்
அன்று என் காதலின் முகவுரையும் நீ தான்
இன்று என் வாழ்கையின் முடிவுரையும் நீ தான்...

என்றுமே நான் உனக்காக வாழ்வதும் உண்மை...

நான் உன்னை நேசித்ததும் உண்மை-
நீ என்னை நேசித்ததும் உண்மை-
நாம் சந்திததும் உண்மை -நாம்
முத்தங்கள் பரிமாரிக்கொண்டதும் உண்மை -
நீ என்னை பிரிந்ததும் உண்மை -
இன்று நான் உன்னைதேடி தவிப்பதும் உண்மை -
நீ என்னை மறந்திருப்பதும் உண்மை -
என்றுமே நான் உனக்காக வாழ்வதும் உண்மை...

மறந்து போனாய்?

இந்தப்பூமியில் எல்லாமே
உனக்கு நினைவிருக்கிறது
எப்படி உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும் மறந்து போனாய்?

என் சோகங்கள் உனக்குப் புரியும்...

உன்னை என்னும் தாபங்களே
என் வாழ்வாகிப்போனது.
தினமும் கரையும் காலங்களோடு
போராடும் கைதியாக்கினாய்.
என்றும் உன் நினைவுகள் நெஞ்சோடு-
காரணம் தெரியவில்லை.
கண்ணீரின் வலி என்றோ உனக்குத் தெரியும்
அன்று என் சோகங்கள் உனக்குப் புரியும்...

இனியவளே...

இனியவளே...
நீயின்றி விடியாமல்போனதடி என் இரவுகள்.
உன்னன்பில் அன்று -நான்வாழ்ந்த காலங்கள்
இன்னும் பசுமையாய் என்னுள்ளே..
மரணங்கூட வர மறுக்குதடி
நினைவுகளின் தொல்லையின்றி நின்மதியாய் தூங்குவதற்கு
தொலைந்துவிட்ட சந்தோஷத்துக்காக ஏங்குதடி என்மனது.
வருவாயோ என்னுயிரே
நீயில்லாமல் நின்மதியின்றி இவன்.
நெஞ்சினில் உன்னையும் விழிகளில் நீரையும் சுமந்து வாழ்கிறேன் உனக்காக

எதற்காக என் வாழ்வில் மௌனஅஞ்சலி செலுத்துகிறாய்?

தினம் தினம் எழும் கேள்விகள்-
பதில் தெரியாமலேயே தொலையும் நிமிடங்கள்.
இரவின் நிஷப்தத்தில் கூட உன் நினைவுகள்..
எதற்காக என் வாழ்வில் மௌனஅஞ்சலி செலுத்துகிறாய்?
நீ வருவாய் என தினந்தினம் காத்திருக்கிறேன் -
உன் கண்களைக் காண என் விழிகளும் ஏங்குதடி

இழந்துவிட்டேனடி என் வாழ்க்கையை..

உன்னுடன் ஒருநாள் வாழ்ந்திருந்தாலும்
ஒரு யுகம் வாழ்ந்த திருப்தி இருந்திருக்குமடி
நீ மட்டும் வாழ்கிறாய்
நான் உன் நினைவுகளுடன் மட்டுமே வாழ்கிறேன்
காதலிலே இழந்துவிட்டேனடி என் வாழ்க்கையை நீ மட்டும்........??

என் கைகடைசி சுவாசமும் நினைக்குமடி....உன்னை ...

உள்ளத்தின் தேடல் உயிருள்ளவரை உன்னோடுதான்
நான்கனவுகாணக் கற்றுக்கொண்டதும்உன்னோடுதான்
உன்னைநான் நேசிக்கவில்லை சுவாசித்திருக்கிறேன்
உயிரைக்கூட உனக்காகத்தான் எழுதிவைத்திருக்கிறேன்
உன்நினைவுகள் இருக்கும்வரை வேறுஉறவுகள் இனித்தேவையில்லை
அன்பேஉன்னை என் கைகடைசி சுவாசமும் நினைக்குமடி.......

எப்படி மறக்கமுடியும் உன்னை?

எப்படி மறக்கமுடியும் உன்னை?
நீ நினைவில் வந்து நிற்கும் போதெல்லாம்
கண்ணீர் வழிந்து உப்புக்கரிக்கும்
ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்
தூக்கு கயிறு முன் நிற்கும் கைதியின் கடைசி நிமிடமாய்...

நீ பிரிந்ததில் வருத்தமில்லை......

நீ பிரிந்ததில் வருத்தமில்லை......
பிரிவது புதிதல்ல....

நீ பிரிந்ததில்
வருத்தமில்லை......

நீ வாழ பிறந்தவள்....
நான் வாழ்த்த பிறந்தவன்....

காட்சிகளுக்குள்
நீயில்லை..... என்றாலும்
உன் இதயத்திற்கு
நான் தானே காவல்....

கனவுகளோடு
வாழ கற்றவனுக்கு
கவலைகள் ஏது?....

உலகத்தில்
எந்த மூலையில்
நீ இருந்தால்
என்ன?

உன்னுள் தானே
நான் இருக்கிறேன்

இதுதான் காதலா..?

அன்று உன்னிடம்
சொல்லமுடியாமல்
தவித்தேன்...!
இன்று உன்னை
மறக்க முடியாமல்
தவிக்கிறேன்...!
இதுதான் காதலா..?

எப்படி மறக்கமுடியும் உன்னை?

தொலைந்துபோனவளே
என் சுவாசம் முழவதும்
நீதானடி சிதறிப்போன கனவுகளுடன்
இரவின்நிறத்தில்தான்
என்னிதயம் காத்திருக்கிறேன்
காலம் நம்மை சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன்