நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

இனியவளே...

இனியவளே...
நீயின்றி விடியாமல்போனதடி என் இரவுகள்.
உன்னன்பில் அன்று -நான்வாழ்ந்த காலங்கள்
இன்னும் பசுமையாய் என்னுள்ளே..
மரணங்கூட வர மறுக்குதடி
நினைவுகளின் தொல்லையின்றி நின்மதியாய் தூங்குவதற்கு
தொலைந்துவிட்ட சந்தோஷத்துக்காக ஏங்குதடி என்மனது.
வருவாயோ என்னுயிரே
நீயில்லாமல் நின்மதியின்றி இவன்.
நெஞ்சினில் உன்னையும் விழிகளில் நீரையும் சுமந்து வாழ்கிறேன் உனக்காக

No comments: