நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday 10 December 2009

நீ பிரிந்ததில் வருத்தமில்லை......

நீ பிரிந்ததில் வருத்தமில்லை......
பிரிவது புதிதல்ல....

நீ பிரிந்ததில்
வருத்தமில்லை......

நீ வாழ பிறந்தவள்....
நான் வாழ்த்த பிறந்தவன்....

காட்சிகளுக்குள்
நீயில்லை..... என்றாலும்
உன் இதயத்திற்கு
நான் தானே காவல்....

கனவுகளோடு
வாழ கற்றவனுக்கு
கவலைகள் ஏது?....

உலகத்தில்
எந்த மூலையில்
நீ இருந்தால்
என்ன?

உன்னுள் தானே
நான் இருக்கிறேன்

No comments: