நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Friday 2 April 2010

விண்ணை தாண்டி வருவாயா?

என் பிரிவுக்கும், தனித்த இரவுக்கும் பொருள்
கொடுத்த காதலை கொடுத்த நீ
என்னோடு இல்லை இன்று தோழி....

நான் கண்ட பொருளை, உனை கண் கொண்டு
கண்டு உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன்..
என்னை தாண்டி என்னுள் வந்த நீ
விண்ணை தாண்டி வருவாயா?

பொம்பளை மனசு புரியல நண்பா...

கம்பியூட்டர் வந்த காலத்திலும்....
பொம்பளை மனசு புரியல நண்பா...
மனசையும் கூட மணிபர்சில்.......
மறைச்சு வைப்பா பொம்பள தான்பா..........
கனவுகளை கொடுத்துவிட்டு......
கண்ணிரண்டைக் கேட்பது காதலா....
சிறையினிலே அடைத்துவிட்டு......
சிறகுகள் தருவது காதலா............
குடித்திருந்தால் ஊர் விலகும்.......
நினைவுகள் விலகுவதில்லையே.....
எனை......மறந்த போதையிலும்.........
புலம்பினேன் அவள்பேர் சொல்லியே
மறப்பதற்காவொரு ஞாபகம் ஹு
இழப்பதற்கா அவள் பூமுகம்......
நடப்பதெல்லாம் வெறும் நாடகம்...........
அணைந்துவிடாது காதலின் தீபம்.............

என்னவளே அடி என்னவளே...

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)

வாய்...மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)

கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழு...

ஒரு பெண்புறா
கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ..!
சுமைதாங்கி சுமையானதே..!
எந்தன் நிம்மதி போனதே...!
மனம் வாடுதே



கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக்காலமே..!
மெத்தைவிரித்தும் சுத்தப் பன்னீர்த் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..!
என் தேவனே ஓ தூக்கம் ...கொடு..!
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆற விடு


கோழி மிதித்து ஒருகுஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தகோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும்வரை..!
பெண்பிள்ளையோ போகும்வரை..!
விழியிரண்டும் காயும்வரை..!
அழுதுவிட்டேன் ஆனவரை..!

 

 


Thursday 17 December 2009

உன் வாழ்வு?

இனியவளே
உன் பின்னே என் வாழ்வு!
யார் பின்னே உன் வாழ்வு?

என்னில் என்றும் மாறாதி௫ப்பது

என்னில் என்றும் மாறாதி௫ப்பது
நினைவிலி௫க்கும் உன் இனிய பிறந்தநாளும்
நினைவு படுத்தும் எனை நீ பிரிந்த நாளும்

கைவிட்டுப் போனதேன்????

காதலெல்லாம் கவிதையானது...................
என் கவிதையின் காதல் மட்டும்
கைவிட்டுப் போனதேன்?????????????

அழவைத்துப் பார்க்கிறாய்

உன்னை அழகானவள்
என்று கூறியதற்கா
என்னை அழவைத்துப் பார்க்கிறாய்

இல்லை.....

உன்னிடம்
என் நினைவாக ஒன்றுமே இல்லை
என்னிடம்
உன் நினைவை தவிர வேறெதுவும் இல்லை

நீ........

உணர்வில் நீ சிதையாமல்
உருவத்தில் நீ மறையாமல்
உன்னதமான இவன் இதயத்தில்
இன்றும் உயிர்த்துடிப்புடன் நீ........

உன்னால்!!!!

இப்போதெல்லாம்
கல்லறைவாசம்
எனக்குப் பிடித்த ஒன்றாகிவிட்டது
கண்மணி உன்னால் !!!!

நீயும் உன் நினைவுகளும் மட்டுமே

நிரந்தரமில்லாத
உறவுகளுக்கிடையில்
நிரந்தரமாய் நீயும்
உன் நினைவுகளும் மட்டுமே

எப்படி முடிந்தது உன்னால்????????

நீ
கொடுத்த முத்தத்தின்
ஈரம்கூட காயவில்லை
அதற்குள் இன்னொருவனின்
தோழில் சாய எப்படி முடிந்தது
உன்னால்????????

மனதோடு உறவாட உன் உறவு தேவை.

விழிகள் நட்சத்திரங்களை
வருடினாளும் விரல்கள்
என்னவோ யன்னல் கம்பிகளோடுதான்!
எங்கு நீ இருந்தாலும் என்னுடன் வாழ்ந்த
வாழ்வை என் இதயம் மறக்காது!
உன் எண்ணம் என் உணர்வுகளை சுட்டெரிக்கின்றது.
சொல்லமுடியாத வார்த்தைகளைக் கொண்டு
சொல்ல துடிக்கவைக்கும் சில கனவுகள்.

உன்னை நேசித்ததற்காய்......

உன்னை நேசித்ததற்காய்
எனக்குள் நானே நொந்து போகிறேன்.
காதல் விளையாட்டில் பெண்ணுக்கு
பாவமில்லை ஆணுக்கு மன்னிப்பில்லை

உன் நினைவில் நான்....

உன் நினைவில் நான்
கரைந்து போனது மட்டுமல்ல
உறைந்தே போயிருக்கின்றேன்
இதை உணர்வாயா நீ…?

ஒர் கடிதம் எழுது

அன்பே எழுது எழுது
எனக்கு ஒர் கடிதம் எழுது
என்னை விரும்புகிறாய் என்றில்லை
வேறோருவரையும் விரும்பவில்லை என்று....

ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்...

என்னை மட்டும் அல்ல
நீ உன்னையும் சேர்த்து தான்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்
என்னைக் காதலிக்கவில்லை
என்று சொல்லுவதால்

ஏன்?

உன்னைப் பார்ப்பதில் உள்ள
சுகத்தை விட
பார்க்காததால் உண்டான வலி
சுகமாய் இருக்கிறதே…. ஏன்?

உனக்கு எங்கே தெரியப்போகிறது!

ஒரு வார்த்தையில்
சொல்லிவிட்டாய்
"மறந்துவிடு!" என்று
உன் அந்த ஒரு வார்த்தையால்
ஏற்பட்ட வலி பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது!

அருகினிலே நீயில்லை

என்னருகே இருக்கையிலே
உன்னருமை தெரியவில்லை
அருமையினை உணர்கையிலே
அருகினிலே நீயில்லை

அழகாய் தான் இருந்தாய்..

அழகாய் தான் இருந்தாய்...
மெல்ல தலை சாய்த்து ...,
நெற்றி புருவம் உயர்த்தி..,
சின்னதாய் புன்னகைத்த போது..,
நான் தான் உடைந்து விட்டேன்

உன்னை...

உன்னை கண் சிமிட்டாமல்
பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்,
ஆனால் இப்பொழுது கண் சிமிட்டும்
நேரமாவது பார்க்க மாட்டோமா என்று ஏங்குகின்றேன்

பிரிவு

நீ இருக்க விரும்பாத என் இதயத்தை
நெருப்பில் இட்டுவிட நினைக்கிறேன்!!!
ஆனால் மனம் வரவில்லை
உன் நினைவுகளும் எரிந்துவிடுமே என்ற தயக்கத்தில்!!!

பிரிவு

நீ இருக்க விரும்பாத என் இதயத்தை
நெருப்பில் இட்டுவிட நினைக்கிறேன்!!!
ஆனால் மனம் வரவில்லை
உன் நினைவுகளும் எரிந்துவிடுமே என்ற தயக்கத்தில்!!!

யார் சொன்னார்கள்....

உனக்கு கவிதை எழுத
தெரியாது என்று யார் சொன்னார்கள்...
உன் புத்தகம் அனைத்திலும்
எழுதி இருக்கிறாயே...
உன் பெயரே ஒரு கவிதை யாய்.........

சொல்லி விட போகிறேன்...

சொல்லி விட போகிறேன்...
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும் உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும் காதல் போரும்...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.
மரணம் கூட பழகலாம் போல...
மன'ரணம்'..... கடினமாயிருக்கிறது.
மௌனம் உணர மறுக்கும் உனக்கு...
வார்த்தைகள் கொண்டே சொல்லி விட போகிறேன்...
உனக்கான என் காதலை..

காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன் உன்
வருகைக்காக காத்திருப்பது
சுகம்தான் என்றாலும் என்
உயிர் போகும் முன் வந்துவிடு
எனக்கு உன்னை தந்திவிடு

உன் நினைவுகள்

உன் நினைவுகள்
என் இரவுகளை
தின்றுகொன்டிருக்கின்ற்ன...

என்னோடு எப்போதும்
பேசும் நிலவிற்கு
இப்போதெல்லாம்
பதில் சொல்வதில்லை...

நீ கடக்கும்
இடமெல்லாம் என்
காலடிகள் காத்துகிடக்கின்றன...

எனக்கான உனது
பார்வைகாக
என் வாழ்வு
நகர்ந்து கொன்டிருக்கிறது.

நம் காதலின் சில பதிவுகள்....

நீ உறங்கிய பின் உன் அமைதியை ரசிக்கும் நான்...
நான் எழும்முன் என் அமைதியை ரசிக்கும் நீ...

உனக்கு தெரியாமல் உன் தேனீரை கொஞ்சம் நான் பருகியதும்...
எண்னாக்கு தெரியாமல் என் சட்டைக்கு நீ இட்ட முத்தங்களும்...

நீ கொடுத்து அனுப்பிய உணவின் நடுவில் ஒளிந்திருந்த சாக்லட்டும்...
அதே உணவுக் கூடேயில் நீ பார்த்த ஒற்றை ரோஜாவும்...

எனக்கான உன் பிரார்த்தனைகளும்....
உனக்கான என் பரிசுகளும்...

நீ நான் என் பிரித்து எழுதியதற்காக நீ கொண்ட கோபமும்...
நெற்றியில் நான் இட்ட சமாதான முத்தமும்....
கலந்துவிட்ட கண்ணீர் நாம் உதடுகளில் இனிக்கும் தருணமும்...

நம் காதலின் சில பதிவுகள்....

இதயம்

தயவு செய்து உன் விழி
அம்புகளை என்மேல் வீசாதே!
தடுப்பதற்கு என்னிடம் கவசமில்லை...
இதயம் மட்டுமே உள்ளது!!

உண்மை காதலன்

நான் இறந்த பின்பு
என் கல்லறை முன்பு வந்து அழுது விடாதே
நான் எழுந்தாலும் எழுவேன்
உன் கண்ணீரை துடைப்பதற்க்காக

அன்னை மடி வீழ்ந்து ஆசை தீர அழ வேண்டும்...

அன்னை மடி வீழ்ந்து
ஆசை தீர அழ வேண்டும்...
ஏதேதோ காரணங்கள், எண்ணமெல்லாம் ஓரிடத்தில்...!
உறக்கமில்லை என்றாலும்
இமையிரண்டும் மோதிக்கொள்ளும்...
முட்டி வந்த கண்ணீரை
மூடி வைத்தே முற்றும் சொல்லும்...!

உன் உறவு தேவையடி

நிஜமாக நேசித்தேன்
நினைவாகிப் போனாய்
உயிருள்ளவரை உன் உறவு தேவையடி.

வருவாயா?

உள் உயிரே உருகுதடி
உன் நினைவுகளால்
என் ஜீவன் ஓயும் நேரத்திலாவது வருவாயா?

நான் தான்...

எனக்கு
முகவரி இல்லை
என்றாலும் உன்னுடைய
நிரந்திர முகவரி நான் தான்....

முயற்ச்சிக்காதீர் தோல்விதான் மிஞ்சும்..!

கடலில் கடுகை தேடுவது,
விண்ணின் எல்லயை தேடுவது,
பெண்ணின் மனத்தின்
அர்த்தம் தேடுவது..
என்றும் இயலாதது…. முயற்ச்சிக்காதீர்
தோல்விதான் மிஞ்சும்..!

காதலும் கூட காரம் தான்

காதலும் கூட காரம் தான்.
சிலருக்கு அது ருசி
பலருக்கு அது கண்ணீர்…

வழிகாட்டிப்போனாளே

விலகாத சொந்தம் இருக்க
தனியாக்கிப்போனாளே
பிரிவாலே நானும்வாட
வழிகாட்டிப்போனாளே

மறுபடியும் வருவேன்

உணர்ந்தேனே என்னில்
உன்னை உருக்காதே மீண்டும் என்னை
நீ தந்த சாபம்காதல் நினைவாலே தவித்தேன் பெண்ணே
நீயின்றி துடித்தேன் கண்ணே விழி என்று உன்னைக்கானும்
தனமுன்னை தேடித்தேடி தேய்ந்தேதான் போனேன் மானே
மரணந்தான் வந்தால் கூட மறுபடியும் வருவேன் நானே

என்னுயிர்

காலங்கள் போனது
காற்றிலே தேடினேன்
விதிதேடும் மதியாக
எனைவிட்டுச்சென்றது
என்னுயிர்

வருவேன்

நிழலேது நியமேது
அறியாது இளமாது
தலைசாய்க்க மடி
தேடி யுகம்தோறும் வருவேன்

உன் நினைவுகள்

இவன்
உடல் உயிரை சுமந்திருக்கும் வரையிலும்
உன்
நினைவுகள் இவனுள் நிறைந்திருக்கும்.

தழுவிஅழுகிறதே

உனது முகத்தை
எனதுஇதயம் உயிரில் எழுதியதே
உறக்கம் மறந்த விழிகள்
அதனை தழுவிஅழுகிறதே

வருவாயோ பெண்னே நீயும் தருவாயோ மீண்டும் என்னை

கண்ணீரில் உன்னைத்தேடி சருகாய்த்தான் போனேன் இன்று
உன்னைநான் கண்டநேரம் என்னை நான் இழந்தேன் இங்கு
நெஞ்செங்கும் உந்தன் நினைவே
போகாதே எந்தன் உயிரே வாழத்தான் தோன்றாதிங்கே
பார்ப்பேனோ இனிமேல் உன்னை தொலைத்தேனே உன்னில் என்னை
வருவாயோ பெண்னே நீயும் தருவாயோ மீண்டும் என்னை

சோக கீதமாக........

எல்லோருக்கும் ரசிப்புக்குரியதுதான்
புல்லாங்குழலொலி
எனக்குகமட்டும்
அதில் மூங்கில் காடுகளின்
சோக கீதமாக கேட்கிறதே

ஈரமாய் மிஞ்சும்

காலங்கள் போகும்
இது கதையாகிப்போகும்
உன்னோடு வாழ்ந்த ஞாபகம்
மட்டும் நெஞ்சினில் ஈரமாய் மிஞ்சும்

வலி

வலியை
விட வலிக்கிரது
உன் நினைவுதரும் வலி

நினைக்காமல் இருக்க முடிவதில்லை

உன்னை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
இரவின் விழிப்பிலும் என்தோழில் நீ சாய்ந்திருக்கின்றாய்

மறந்து போனாய்?

இந்தப் பூமியில்
எல்லாமே உனக்கு நினைவிருக்கிறது
எப்படி உன்னை நேசித்த உள்ளத்தை
மட்டும் மறந்து போனாய்?

சின்னாபின்னமாக்கிவிட்டாயே

தேனீர்போல சிறுகசிறுக சேர்த்தேனே சீரூட்டிப் பார்த்தேனே அதை சின்னாபின்னமாக்கிவிட்டாயே

Thursday 10 December 2009

வாழ வி௫ப்பமில்லை

நீ இல்லாத இவ்வுலகில் வாழ
எனக்கு வி௫ப்பமில்லை இ௫ந்தும்
உன் நினைகளைப் பிரிந்து சாகவும் முடியவில்லை
இந்த உலகத்திலி௫ந்தே அன்னியப்படுத்தப்பட்டதாய்
உணர வைக்கிறாயடி கண்ணே

என்றும் துனையாக.

உன் மனதில்- உன் இதயத்தில்
உன் கனவில்-உன் வாழ்வில்
யாரேனும் இருக்கலாம் -ஆனால் யாரும்
இல்லாதபோது நான் இருப்பேன் -உன் அருகில்
என்றும் துனையாக.

அதே இடத்தில்

தொலைந்த இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறேன்.
நிலை தடுமாற வைக்கிறாய்.
வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்

உன்காதலுக்காக ஏங்குதடி நெஞ்சம்..

உன் மடியில்
தலைசாய்த்திருந்த தருணத்தில் கூட
நினைக்கவில்லை உன் பிரிவை
உன் விரல் பிடித்து நடைபழகிய அந்நாட்களை
திருப்பிக்கொடுப்பாயா மீண்டும்
உன்காதலுக்காக ஏங்குதடி நெஞ்சம்..

நீ

அன்நாட்களில் என்மடியில் காதலியாக நீ இன்நாட்களில் வேறொறுவன் மடியில் மனைவியாக நீ

நான்படும் வேதனை

உன்தாய் கருவிலே
உனைசுமந்த வேதனையைவிட
என் இதயத்தில் உனைசுமந்து
நான்படும் வேதனை
அதை சொல்லவே மொழில்லையடி

நிலவுகூட நெருப்பானதடி உன்நினைவுகளால்

என் வாழ்க்கை எங்கும் இரத்தத்தின் வாசத்தை உணர்கிறேன்
உன்னோடுதான் நான் உணர்ந்தேன் உன்னதபாசம் என்றால் என்ன என்பதை
உண்மையான காதல் என்றால் உயிரைஉருக்கிப் பிழிவதா?
நிலவுகூட நெருப்பானதடி உன்நினைவுகளால்
என்றும் உன்ஞாபகங்கள் என் நெஞ்சில் புயல்வீசிக்கொண்டே இருக்கும்..

ஏன் இந்த தூரம்?

உனக்கும் எனக்கும் இடையில்
ஏன் இந்த தூரம்
அதனால் தான் என் கண்ணில்
என்றும் ஈரம்
என்று வரும் நான் உன்னை
சேரும் நேரம்
அது வரை தாங்குமா உயிரை
இந்த தேகம்?

எதற்காக என்னை நேசித்தாய்?

எரியும் நெருப்பிலே எனையிட்டுப்போனவளே
எதற்காக என்னை நேசித்தாய்? இதயம்முழவதும்-
நீ தந்த நினைவுகளுடன் நின்மதியின்றி நான் வாழவா?

மன்னிக்க முடியவில்லை

பகலோடு சேர்ந்து கருகிக்கொண்டிருப்பது காலத்தின் சிறகுமட்டுமல்ல என் காதலும்தான் -மரணமே!

உன்னை என்னால் மன்னிக்க முடியவில்லை ஏன் என்னை மட்டும் இன்னும் விட்டுவைத்திருக்கிறாய்??

நினைவுகளுடன் உனக்காக வாழ்கிறேன் ஜடமாக...

எதற்காக இத்தனை தூரம் விலகிச்சென்றாய்?
பதில் தேடித்தேடியே என் இளமைகள் தொலையுது
உன்னை எண்ணியே- உன்
நினைவுகளுடன் உனக்காக வாழ்கிறேன் ஜடமாக....

இன்று புரியவைத்தது உன் பிரிவு...

தோழியே அன்று நான்படித்தேன்
பாசம்வைப்பது பாவம்
பழகிப்பிரிவது துயரம் என்று
ஆனால் அன்று அது புரியவில்லை
இன்று புரியவைத்தது உன் பிரிவு...

கற்றுக் கொடுத்தன

உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!

யார் சொன்னார்கள்,???

என் வீட்டு ரோஜா செடி திடிரென்டு
பூ பூப்பதை நிறுத்திவிட்டது,
அதற்கு யார் சொன்னார்கள்,
நீ என்னை பிரிந்ததை...

வெறுமையாகவே இருக்கின்றன என் கனவுகள், என்னை போலவே...

கடைசியாக என் கனவில வந்தபோது,
நி விட்டு சென்ற காலடி சுவடுகளுடனும்,
உன் கொலுசுகள விட்டு சென்ற ஓசைகளுடனும்,
வெறுமையாகவே இருக்கின்றன என் கனவுகள்,
என்னை போலவே...

நீ என்னை பிரிந்தவுடன்..

உன் அழகை எல்லாம் எடுத்து
தங்களை அலங்கரித்து கொண்டிருந்த
என கவிதைகள் எல்லாம்,
இப்போது பார்,
அழகை இழந்து விதவைகள் போல
ஆகிவிட்டன, நீ என்னை பிரிந்தவுடன்..

தோண்டி பார் என் கல்லறையை

நான் இறந்த பிறகு,
தோண்டி பார் என் கல்லறையை,
சில வைரங்களும் முத்துகளும கிடைக்கலாம்,
அவை வேறு ஓன்றும் அல்ல,
உன்னோடு சிரிக்க நினைத்த சிரிப்புகளும்,
உனக்கு கொடுக்க நினைத்த முத்தங்களும் தான்..

தெரியவில்லை.....

உன்னை மறந்துவிட முயற்சி,
செய்து கொண்டு இருக்கிறேன்.
மறந்துவிட போகிறேனா இல்லை,
இறந்துவிட போகிறேனா தெரியவில்லை

காதல் என்பது கானல்....

நொடியில்
என்னுள் பூத்த
காதல் நீ..........
தொட்ட கணத்தில்
நெஞ்சில்
தீ.......................

தீண்டிய
பொழுதில்
மனமசைத்தாய்
என் நெஞ்சை
மழுங்கடித்தாய்....

காதல்
கடலில் நான்
தவிக்க மின்னலாய்
மறைந்தாய்..................

தொட்டு
தூக்கிய வாழ்க்கை
சொன்னது
காதல் என்பது கானல்

என் முதல் காதல் நீ

என் முதல்
காதல் நீ

நான்
காதலித்ததே
உனக்கு தெரியாது.

என் கடைசி
காதல் நீ

நான்
உன்னை மட்டும்
காதலித்ததுதான்
உனக்கு தெரியும்.

என்று புரிவாய் எனை....

உனக்காக காத்திருந்து என்
உயிர் பிரியுமென்றால் அதைவிட
வேறன்ன வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே

எத்தனை இரவை என் விழி
பகலாக்கியிருக்கும் எல்லாம்
அன்பே நிலா உன்னை காணத்தானே

என்று புரிவாய் எனை
என்றும் காத்திருக்கும் உன்
காதலன் நானல்லவா

இன்னொரு உயிராய்..!!

காலச்சக்கரம் அவள் கால்த்தடத்தை அழித்திருக்கலாம்,
ஆனால் என்றும் என்னுள் இருக்கும்
காதலை அழிக்க முடியாது
என் மூச்சுக்காற்று இருக்கும் வரை
என் காதலும் ஜீவித்திருக்கும் என்னுள்
இன்னொரு உயிராய்..!!

அவள் என்னைப் பிரியவில்லை..!

கேலி செய்யாதீர்கள் என்னை…
காதலில் தோற்றவன் என்று,
அவள் என்னைப் பிரியவில்லை..!
இன்றும் என் அருகில் இருக்கிறாள்
நினைவுகளாய் !!

வாசிக்க நீயின்றி…

அன்று கண்ணீர் கூட சுகமானது
துடைக்க நீ இருந்ததாய்…

இன்று சிரிப்பு கூட வேதனையானது
சேர்ந்து சிரிக்க நீ இல்லாததால்..

அன்று ஒருவரி சொல்ல தயங்கிய நான்
இன்று பக்கம் பக்கமாய் கிறுக்கித்தள்ளுக்கிறேன்
என் கவிதைகளை வாசிக்க நீயின்றி…

யாருக்குமே கேட்டிருக்காது ...

கடற்கரையில்
பிரிந்த காதலுக்கெல்லாம்
கத்திஅழும் சக்தி இருந்தால்
அலைகளின் சத்தம் யாருக்குமே கேட்டிருக்காது

நினைவு....

உன்னை நினைக்காத நேரங்களில் எல்லாம்
நினைத்துக் கொள்கிறேன்
உன்னை நினைக்கக் கூடாது என்று.

கோபம் பற்றி எனக்குத் தெரியாதா..

உன்
பொய்க் கோபம் பற்றி
எனக்குத் தெரியாதா..
கிள்ளியவனென்பதற்காக
மணம்
வீசவா மறுக்கும் மல்லிகை?

நீ தான்...

என் காதலின் ஆரம்பமும் நீ தான்
கண்ணீரின் தொடக்கமும் நீ தான்
அன்று என் காதலின் முகவுரையும் நீ தான்
இன்று என் வாழ்கையின் முடிவுரையும் நீ தான்...

என்றுமே நான் உனக்காக வாழ்வதும் உண்மை...

நான் உன்னை நேசித்ததும் உண்மை-
நீ என்னை நேசித்ததும் உண்மை-
நாம் சந்திததும் உண்மை -நாம்
முத்தங்கள் பரிமாரிக்கொண்டதும் உண்மை -
நீ என்னை பிரிந்ததும் உண்மை -
இன்று நான் உன்னைதேடி தவிப்பதும் உண்மை -
நீ என்னை மறந்திருப்பதும் உண்மை -
என்றுமே நான் உனக்காக வாழ்வதும் உண்மை...

மறந்து போனாய்?

இந்தப்பூமியில் எல்லாமே
உனக்கு நினைவிருக்கிறது
எப்படி உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும் மறந்து போனாய்?

என் சோகங்கள் உனக்குப் புரியும்...

உன்னை என்னும் தாபங்களே
என் வாழ்வாகிப்போனது.
தினமும் கரையும் காலங்களோடு
போராடும் கைதியாக்கினாய்.
என்றும் உன் நினைவுகள் நெஞ்சோடு-
காரணம் தெரியவில்லை.
கண்ணீரின் வலி என்றோ உனக்குத் தெரியும்
அன்று என் சோகங்கள் உனக்குப் புரியும்...

இனியவளே...

இனியவளே...
நீயின்றி விடியாமல்போனதடி என் இரவுகள்.
உன்னன்பில் அன்று -நான்வாழ்ந்த காலங்கள்
இன்னும் பசுமையாய் என்னுள்ளே..
மரணங்கூட வர மறுக்குதடி
நினைவுகளின் தொல்லையின்றி நின்மதியாய் தூங்குவதற்கு
தொலைந்துவிட்ட சந்தோஷத்துக்காக ஏங்குதடி என்மனது.
வருவாயோ என்னுயிரே
நீயில்லாமல் நின்மதியின்றி இவன்.
நெஞ்சினில் உன்னையும் விழிகளில் நீரையும் சுமந்து வாழ்கிறேன் உனக்காக

எதற்காக என் வாழ்வில் மௌனஅஞ்சலி செலுத்துகிறாய்?

தினம் தினம் எழும் கேள்விகள்-
பதில் தெரியாமலேயே தொலையும் நிமிடங்கள்.
இரவின் நிஷப்தத்தில் கூட உன் நினைவுகள்..
எதற்காக என் வாழ்வில் மௌனஅஞ்சலி செலுத்துகிறாய்?
நீ வருவாய் என தினந்தினம் காத்திருக்கிறேன் -
உன் கண்களைக் காண என் விழிகளும் ஏங்குதடி

இழந்துவிட்டேனடி என் வாழ்க்கையை..

உன்னுடன் ஒருநாள் வாழ்ந்திருந்தாலும்
ஒரு யுகம் வாழ்ந்த திருப்தி இருந்திருக்குமடி
நீ மட்டும் வாழ்கிறாய்
நான் உன் நினைவுகளுடன் மட்டுமே வாழ்கிறேன்
காதலிலே இழந்துவிட்டேனடி என் வாழ்க்கையை நீ மட்டும்........??

என் கைகடைசி சுவாசமும் நினைக்குமடி....உன்னை ...

உள்ளத்தின் தேடல் உயிருள்ளவரை உன்னோடுதான்
நான்கனவுகாணக் கற்றுக்கொண்டதும்உன்னோடுதான்
உன்னைநான் நேசிக்கவில்லை சுவாசித்திருக்கிறேன்
உயிரைக்கூட உனக்காகத்தான் எழுதிவைத்திருக்கிறேன்
உன்நினைவுகள் இருக்கும்வரை வேறுஉறவுகள் இனித்தேவையில்லை
அன்பேஉன்னை என் கைகடைசி சுவாசமும் நினைக்குமடி.......

எப்படி மறக்கமுடியும் உன்னை?

எப்படி மறக்கமுடியும் உன்னை?
நீ நினைவில் வந்து நிற்கும் போதெல்லாம்
கண்ணீர் வழிந்து உப்புக்கரிக்கும்
ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்
தூக்கு கயிறு முன் நிற்கும் கைதியின் கடைசி நிமிடமாய்...

நீ பிரிந்ததில் வருத்தமில்லை......

நீ பிரிந்ததில் வருத்தமில்லை......
பிரிவது புதிதல்ல....

நீ பிரிந்ததில்
வருத்தமில்லை......

நீ வாழ பிறந்தவள்....
நான் வாழ்த்த பிறந்தவன்....

காட்சிகளுக்குள்
நீயில்லை..... என்றாலும்
உன் இதயத்திற்கு
நான் தானே காவல்....

கனவுகளோடு
வாழ கற்றவனுக்கு
கவலைகள் ஏது?....

உலகத்தில்
எந்த மூலையில்
நீ இருந்தால்
என்ன?

உன்னுள் தானே
நான் இருக்கிறேன்

இதுதான் காதலா..?

அன்று உன்னிடம்
சொல்லமுடியாமல்
தவித்தேன்...!
இன்று உன்னை
மறக்க முடியாமல்
தவிக்கிறேன்...!
இதுதான் காதலா..?

எப்படி மறக்கமுடியும் உன்னை?

தொலைந்துபோனவளே
என் சுவாசம் முழவதும்
நீதானடி சிதறிப்போன கனவுகளுடன்
இரவின்நிறத்தில்தான்
என்னிதயம் காத்திருக்கிறேன்
காலம் நம்மை சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன்